jump to navigation

வனப்பேச்சியிலிருந்து…. ஏப்ரல் 28, 2008

Posted by தமிழ் in கவிதை.
4 comments

“சுடு சோறு கொதி கஞ்சி

வேப்பம் பழம்

பொசுக்கியதே இல்லை

ஊர் வெயில்.

குளிரூட்டப்பட்ட

நகரத்து அறைகளில் வசிக்கும்

என் மகள் கேட்கிறாள்”

………….

சுருண்டிருக்கும் சர்ப்பமென
அவசரம் புதைந்திருக்கும்
இந்நகரத்தின் எந்த வீட்டில்
குழந்தைக்கான ஒரு தூளிச்சேலையும்
வயது முதிர்ந்தவளுக்கான சுருக்குப்பையும் இருக்கிறதோ
அங்குதான் விருந்தினளாக வருவேன்
என்ற அடம் வனப்பேச்சிக்கு…